வெண்மை (தூய்மையானவள் )
வெண்புறாவே வெள்ளை -நிலாவே ....
பால்வண்ணம் கொண்டவளே ....
வெண்சங்கு கழுத்தினிலே.....
வெண்முத்து மாலையணிந்து ......
வெண்பஞ்சு மேகத்திலே.......
தேவதையாய் வந்தவளே....
தெளிந்த நீரோடையாம் என் -மனதில் ....
தெவிட்டாத தேன் சுரந்தாய் .....
ஈடில்லா - உன் அழகில் ......
மயங்கிட்ட என் மனதை ....
வெண்பணி போல் கறைதாயே ....
பாற்க்கடலாம் என் மனதை .....
அன்பெனும் மத்திட்டு கடைந்தாயே......
வெண்நுரை பொங்கும் அலைதனிலே .....
வெண்ணையாய் திரண்டதுவே என் -அன்பு ....
வெண்ணை உண்ட உன் -மனமோ .....
வெண் மேகமாய் விரிந்ததுவோ ....
என் -தூய அன்பை நீ ஏற்றிட்டாய் ....
பல -நிலையில் மாறினும் ......
கலப்படமில்லாத பாலதுவோ .....
வெண்மை நிறம் மாறாதது போல் ....,
நம் - அன்பும் மாறாது நிலைத்துவிடும் ......
வெள்ளை மனம் படைதோர்க்கு -நம் .....
அன்பின் -எல்லையை எட்டி பிடித்தால் ......
வெள்ளி - நிலாவை கையில் பிடித்தது போல்
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக